படித்ததிலிருந்து ........
வேண்டாம்.. விலகிவிடு!
வேண்டாம்.. விலகிவிடு!
மரணத்தின் வலிகூட மரத்துப்போன பிறகும் -
உன்வார்த்தைகள் வலிக்கிறது..!
வேண்டாம்.. விலகிவிடு!
காலங்கள் கடந்து காப்பியமாய்க் கிடக்க -
காதல்முடிந்ததென்று நீயோமுற்றுப்புள்ளி இடுகிறாயே..!
வேண்டாம்.. விலகிவிடு!
கற்கள் கேட்கிறாயே நீ -
இந்தக்காதல் கொண்ட கடைக் கவியிடம்சொற்கள் மட்டும்தானேசொந்தமாய் இருக்கின்றன!
வேண்டாம்.. விலகிவிடு!
யதார்த்தம் பேசுகிறாய் நீ -
அது முடியாதவர்களின் முட்டாள் வியாக்கியானம்..!
யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?
யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?
அதில் கலந்திருந்த சிறு வெட்கம் -
இன்னும்எஞ்சியிருக்கும் வெப்பம்அது போதும் எனக்கு!
வேண்டாம்.. விலகிவிடு!
என்கவிதைகள் கசக்கிறதா உனக்கு? -
சொல்மௌனம் பேசப் பழகிக்கொள்கிறேன்
என் கண்ணீர் கனக்கிறதா உனக்கு? -
சொல்போலிப் புன்னகை பூசிக்கொள்கிறேன்
மரணம் கேட்கிறாயே நீ -
மறந்தாயாநம் காதல் கதையில் காலனுக்கு இடமில்லை!
வேண்டாம்.. விலகிவிடு!
நீ வாழத்தொடங்கு
நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்
வேண்டாம்.. விலகிவிடு!
http://subankan.blogspot.in/லிருந்து ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக